இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரங்களோடு பேசுதல்

படம்
• இன்றைய “கத கேப்போம்” நிகழ்வின் துவக்கத்தில் ஒரு சிறுவனையும் சிறுமியையும் கரும்பலகையின் இரு புறமும் மரத்தை வரையச் சொன்னோம். இரண்டு நேர்கோடுகள் ஒரு வட்டம் என இருவரும் கணித சூத்திரம்போல் ஒரே மாதிரியான ஒன்றை வரைந்தார்கள். ஒரு மரம் நிஜத்தில் இப்படி மட்டும்தான் இருக்கிறதா? ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் உள்ள வித்தியாசம்? ஒவ்வொரு மரத்திலும் இலைகளின் வடிவம் எப்படி உள்ளது? குழந்தைகளுடனான ஒரு சிறு உரையாடல் மரங்களை நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்றது.    அண்டு                          B காஜா ஹூசைன்                      B. தஸ்னீம் பிர்தௌஸ் குழந்தைகள் குழுவாகப் பிரிந்து பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களையும் அருகில் நின்று பார்த்து வந்தனர். தன் சூழலை மிகச்சிறப்பாக உள்வாங்கக்கூடிய குழந்தைகள் மரத்தின் அருகிலேயே அமர்ந்து மர ஓவியத்தை உருவாக்க விரும்பினார்கள். எல்லோரும் உற்சாகமாக மரங்களை சுற்றிக்கொள்ள எப்போதும் பிறரோடு வம்பிழுத்துக்கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்கள் குட்டியான ஒரு செடியின் அருகில் அமர்ந்து குனிந்துகுனிந்து அதில் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். மரங்

நீண்ட பாதை

படம்
• ஒரு நாள் சூரியாவின் பள்ளியில் கோடை விடுமுறை தொடங்கியது. அவன் வீட்டிற்கு வந்தான். அந்த நேரம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் விளையாட்டாக ஒரு கடிதம் எழுதத் துவங்கினான்.    “அம்மா, என் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். அதனால் நானும் செல்கிறேன்” என எழுதிவிட்டு காட்டிற்கு தனியாகச் சென்றான். அடர்ந்த மரங்களையும் பசும்புதர்களையும் கடந்து செல்கையில் ஒரு மலைச்சரிவில் சிறிய குகை ஒன்றைப் பார்த்தான்.  அதனுள் செல்ல ஆசையாக இருந்தது. குகைக்குள் நுழைந்த உடனே குகை திடீரென மூடிவிட்டது.  பயந்து அழுதுகொண்டே உள்ளே நடந்தால் அங்கே நிலம் பாலைவனமாக இருந்தது.  சவாலான பாலைவனத்தை நடந்து நடந்து கடக்கையில் 2கிமீ தூரம் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த இடம் அவனை நடுங்க வைத்தது. அது ஒரு பனிப்பிரதேசமாக மாறி இருந்தது.  அதுவும் 2 கிமீ தூரத்துடன் முடிகையில் வியப்பு. அடுத்த 2 கிமீ தூரம் வண்ணங்கள் இறைந்து கிடந்தது. அது இதுவரை அவன் காணாத வானவில் பாதை. அதில் சறுக்கியபடி பயணித்தான். வானவில் பாதை முடியும் இடம் அவன் பாதத்தை என்னவோ செய்தது. அத

மரத்தின் கதை

• ஒரு ஊரில் ஒரு வீடு. அந்த வீட்டுக்கு கிட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது.  அந்த மரத்தில் பறவைகள் பழம் சாப்பிட்டுவிட்டு எச்சமிட்டுச் சென்றன.  அவை எச்சமிட்டுவிட்டு சென்ற இடத்தில் புதிய மாமரம் வளரத் தொடங்கியது.  அந்த மாமரம் வளர்ந்தபின் அவற்றின் இலைகள் கீழே விழுந்தன.  அந்த மாமரத்தின் அருகில் பூக்கள் பூத்தன.  அந்த மாரத்தின் அருகே பள்ளி ஒன்று இருந்தது. அந்தப் பள்ளியில் தேசியக்கொடி ஒன்று இருந்தது.  அந்த மாமரத்தில் மாம்பழம் பழுத்தது.  அதன்பின் அதை பறவைகள் கொத்திச் சாப்பிட்டன.  பூக்கள் மிகவும் அழகான பூக்களாக பூத்துக்கொண்டிருந்தன அந்த வீட்டில் இருந்து.  மனிதர்கள் பழம் பறித்துச் சாப்பிட்டார்கள்.  அந்தப் பழம் மிகவும் சுவையாக இருந்ததனால் மீண்டும் மீண்டும் பரித்துச் சாப்பிட்டார்கள். மறுபடியும் அந்த மரத்தில் பறவைகள் உட்கார்ந்தன.  பழங்களை சாப்பிட்டன.  திடீரென அந்த மரம் கீழே சாய்ந்தது.  பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த பறவைகள் இறந்தன. •   மோனிஷா, அரசுராஜா, த.மாரீஸ்வரகுமார், முத்து சூரியா, சிவனேசன் – ஆறாம் வகுப்பு காயத்ரி, ரத்னப்பிரியா, சர்மிளா – ஏழாம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்

அதிசய சிறுவன்

ஒரு ஊரில் ஒரு சிறிய வீடு. அந்த வீட்டில் ஒரு சிறுவன் மட்டும் இருந்தான்.  அவன் பெயர் சந்திரன்.  ஒருநாள் அவன் கடற்கரைக்குச் சென்றான்.  அங்கு ஒரு மீனைப் பிடித்தான்.  அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அருகிலேயே தூங்கிவிட்டான்.  மறுநாள் அவன் உடம்பில் ஏதோ மாற்றம் வந்ததுபோல் உணர்ந்தான்.  ஆனால் ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டான். அடுத்த நாளும் உடம்பில் ஏதோ மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான்.  மீண்டும் ஒன்றும் இல்லை என விட்டுவிட்டான். இப்படியே நாட்கள் செல்லச்செல்ல அவன் உடலில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.  ஒருநாள் கடைக்குச் செல்லும்பொழுது ஒருவர் சந்திரனின் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதைப் பார்த்து விபரம் கேட்டார்.  அப்பொழுதும் அவன் யோசித்தான்.  மீண்டும் அவன் உடலில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டே நடந்தான். அப்பொழுது ஒரு யோசனை வந்தது.  ஒருநாள் முழுவதும் கண்ணாடிமுன் அமர்ந்து உடலையே கவனித்துக்கொண்டிருந்தால் என்ன நிகழ்கிறது என தெரிந்துகொள்ளலாம் என ஆசைப்பட்டான்.  நாளெல்லாம் கண்ணாடிமுன் நின்றவன் அவன் உடலைப் பார்த்து வியந்துபோனான்.  அவன் காலையில் குண்டாக இருந்தான், மதி

வண்ண மரம்

ஒரு ஊரில் கதிர் என்ற சிறுவன் இருந்தான். அவன் பள்ளியில் செடி ஒன்று இருந்தது.  அந்தச் செடியின் ஒரு இலை மட்டும் மிகவும் அழகாக இருக்கும்.  கதிருக்கு மிகப் பிடித்தமான இலையாக அது இருந்தது.  தினமும் அந்த இலையைப் பார்த்துக்கொண்டே இருப்பது அவனுக்கு விருப்பமானது.  ஒருநாள் அவன் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது ஆசிரியர் அவனிடம், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். உடனே கதிர் ஆசிரியரிடம் “இங்கே பாருங்கள், இந்த இலை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றான். ஆசிரியர் கதிரிடம், “அந்த இலையை நீயே எடுத்துக்கொள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அவனுக்குப் பிரியமான அந்த இலையோடு அன்று வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது பள்ளி விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள். அவனுக்கு விருப்பமான அந்த இலையை அன்றைய நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது அந்த இலை திடீரென்று நிறைய வண்ணங்களால் நிறைந்தது.  அதனைப் பார்த்து வியந்துபோனவன் அந்த இலையை எடுத்துக்கொண்டுபோய் காட்டிற்குள் வீசினான்.  இலை விழுந்த காட்டிற்குள் அன்றைய நாள் பெரிதாக மழை பெய்தது.  வண்ண இலை மண்ணுக்குள்

பேசும் புத்தகம்

ஒரு நாள் காலை சூர்யா என்ற சிறுவனுக்கு அவன் அப்பா ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுத்தார். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு சூர்யா தன் அறைக்குச் சென்றான். அப்பொழுது அப்பா வாங்கித் தந்த கதைப்புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தோன்றியது.  அதை எடுத்துப்பார்த்தால் அதில் ஒன்றுமே எழுதியிருப்பது போன்று தெரியவில்லை.  ஆனால் அதில் வாய் போன்ற உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது.  சூர்யா அதை மெதுவாகத் தொட்டுப்பார்த்தான்.  தீண்டியவுடன் அது திடீரென கதை சொல்லத் தொடங்கியது.  அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தாலும், அதன் குரலும் கதையும் மிகவும் பிடித்திருந்தது.  தினமும் சூர்யா அதில் மூன்று கதைகள் கேட்பான்.  ஒரு நாள் இரவு உணவை முடித்துவிட்டு அந்த புத்தகத்திடம் கதை கேட்கச் சென்றான். அங்கே புத்தகம் காணவில்லை.  வீடு முழுவதும் சூர்யா புத்தகத்தை தேடினான்.  எங்கே தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. சோகத்துடன் சென்று தன் அறையில் படுத்துக்கொண்டான்.  அன்று தூக்கத்தில் அவனுக்கொரு கனவு வந்தது.  கனவில் ஒரு புத்தகம் இருந்தது.  கனவில் வந்த புத்தகம் அவனுடன் பேசியது.  “நான் உன் நண்பனிடம் இருக்கிறேன். நேற்று உன் நண்பனை பார்க

பிரியாத நண்பர்கள்

ஒரு ஊரில் ஒரு அழகான தோட்டம் இருந்தது.  அந்த தோட்டத்தில் அழகான பூ ஒன்று இருந்தது. ஒரு நாள் ஒரு ஆட்டுக்குட்டி உணவு தேடி அந்தப் பூந்தோட்டப் பாதையில் சென்றது. அப்பொழுது அந்தத் தோட்டத்தில் இருந்த பூவை ஆடு பார்த்தது. அந்த ஆடு செடியை சாப்பிடச் சென்ற பொழுது அந்தப் பூ மிகவும் வருந்தியது. அதனைப் பார்த்த ஆடு பரிதாபப்பட்டு நான் உன்னை சாப்பிடமாட்டேன் என்று கூறியது.  ஆடும் பூவும் நண்பர்கள் ஆகினர். அப்பொழுது தேனி ஒன்று அந்தப் பூவில் தேனெடுக்க வந்தது.  அந்தத் தேனிக்கோ நண்பர்களே இல்லை. பூவையும் ஆட்டுக்குட்டியையும் பார்த்த தேனி என்னையும் உங்கள் நண்பனாக்கிக்கொள்வீர்களா? என ஆசையாகக் கேட்டது.  பூவும் ஆட்டுக்குட்டியும் உடனே சரி என்றன.  ஒருநாள் மூன்று பேரும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது தேனீ, நாம் அனைவரும் ஊரைச்சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டது.  அப்பொழுது ஆட்டுக்குட்டி சரி என்று உடனே தலையாட்ட, பூவுக்கோ வருத்தமாகிவிட்டது. உடனே ஆட்டுக்குட்டி பூவைப்பார்த்து ஏன் கவலைப்படுகிறாய் என்று கேட்டது. அதற்கு பூ, நீங்கள் இரண்டு பேரும் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள் என்று பதில் சொன்னது.  நீ

பசுமையான 5000 மலைக்காடுகள்

பூமி ஒரு நாள் விண்வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தது.  அப்போது ஒரு இடத்தில் 5000 மலைகள் கொண்ட ஒரு காடு இருந்தது.  அந்தக் காட்டில் யானை, புலி, முயல், மான், கரடி ஆகியவை மட்டுமல்லாமல் நிறைய அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் சந்தோசமாக இருந்தன.  அதனைப் பார்த்து பூமிக்கு ஒரே மகிழ்ச்சி.  என்னுடைய கிரகத்தில் விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களே என பூமி சொல்லிச் சொல்லி மகிழ்ந்தது.  அதனை மற்ற கோள்களிடமும் கூறியது.  மற்ற கோள்களும் அதனை வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தன.  உடனே ஒரு கோள் சொன்னது நாமும் ஏன் விலங்குகளாக மாறி இந்த பசுமையான அதிசய காட்டிற்குள் செல்லக்கூடாது.  ஆனால் நம்மால் எப்படி விலங்குகளாக மாற முடியும்? என்றது வேறொரு கோள்.  வாருங்கள் நாம் சூரியனிடம் கேட்போம், அவர் நம்மை விலங்குகளாக மாற்றுவார் என்றது மற்றொன்று. அனைவரும் சூரியனிடம் சென்று கேட்டனர். சூரியனே, பூமியில் பசுமையான அழகிய காடு ஒன்று இருக்கிறது. அதில் விலங்குகள் பறவைகள் அனைத்தும் சந்தோசமாக இருக்கின்றன. அதனால் நாங்களும் இன்று ஒரு நாள் மட்டும் விலங்குகளாக மாறி காட்டிற்குள் செல்லவா? எதற்காக பூ

கறுப்புப் பூனை

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு முயல் இருந்தது.  அதற்கு பக்கத்து வீட்டில் கறுப்புப் பூனை ஒன்றும் இருந்தது.  ஆனால் மானும் குதிரையும்தான் முயலுக்குப் பிடித்தமான நண்பர்கள். அதனோடுதான் எப்போதும் விளையாடி வந்தது.  ஒரு நாள் முயலை அந்தக் கறுப்புப் பூனை விளையாட அழைத்தது.  அதற்கு முயல், “உன்னுடன் விளையாடினால் உன் மீதுள்ள கறுப்பு நிறம் எனக்கும் ஒட்டிக்கொள்ளும். போ! இங்கே இருந்து” என்று சொல்லிவிட்டது.  மறுநாள் பூனை மறுபடியும் விளையாடலாமா எனக் கேட்டது. அதற்கு முயல் விளையாடலாம்! விளையாடலாம்! என்று சொன்னது. இப்பொழுது எனக்கு பச்சை இலைகளும் கேரட்டும் வேண்டுமே என முயல் கேட்டது.  கறுப்புப் பூனை உடனே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தது.  இப்பொழுது விளையாடலாமா… என்றது பூனை.  விளையாட்டா…!  “எனக்கு உணவு தேட சோம்பலா இருந்துச்சு, அதனாலதான் உன்ன வேல வாங்குனேன்” நீ கொடுத்த உணவுக்கு நன்றி என்றது முயல்.  சொல்லிவிட்டு புதருக்குள் குதித்துக்குதித்து ஓடியது. அங்கு ஒரு குழி இருந்ததை அறியாத முயல் அதற்குள் தவறி விழுந்தது. உடனே முயல் தன் நண்பர்களை அழைத்தது.  மான் நண்பன் வந்தான்.  விரைவாக என்னைக் காப்பாற்று என்று கே

மந்திர குண்டு

ஒரு நாள் நான் விளையாடிட்டு இருக்கும்போது ஒரு குண்டப் பாத்தேன்.  அப்புறம் கையில் எடுத்தேன்.  அது விசித்திரமா இருந்தது.  அத என் நண்பர்கள் எல்லாத்தையும் கூப்ட்டு காமிச்சேன்.  எல்லாரும் அத வெச்சு விளையாண்டோம். ஆனா அடுத்த நாளே அந்த குண்டு காணாமப் போயிடுச்சு.  அப்ப நான் தேடிக்கிட்டே இருந்தேன்.  அந்த நேரம் என் நண்பர்கள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தாங்க.  வந்தவங்க தேடிக்கொடுத்துட்டாங்க.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.  அடுத்த நாள் அந்தக் குண்டத் தொடும்போது விசித்திரமான ஒரு சத்தம் கேட்டது.  அப்ப அது ஒரு மந்திர குண்டுன்னு நெனச்சுக்கிட்டேன்.  அப்புறம் ரொம்ப சத்தம் கேட்டது.  அத நான் இசையின்னு நெனச்சேன். S. வசந்தி (ஐந்தாம் வகுப்பு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காமராஜ் நகர், சுந்தராபுரம், கோயம்புத்தூர்.