இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூத்தொட்டி

ஒரு ஊர்ல ஒரு பூத்தொட்டி. அதுல நெறையா பூ இருந்துச்சு. ஒரு நாள் தேனீக்கள் வந்து தேன் குடிச்சது. ஒரு நாள் அந்த பூவெல்லாம் வாடிப்போச்சு. ஒரு பையன் அதப்பாத்து அழுதுட்டு இருந்தான். பூவெல்லாம் வாடிருச்சுனு அழுதான். அவங்க அம்மா, அப்பா எல்லாம் வந்து ஏன் அழறேன்னு கேட்டாங்க. நான் ஆசையா வளத்த பூவெல்லாம் வாடிருச்சின்னு அவன் சொன்னான். மறுபடியும் பூ வளந்துரும்னு அம்மா சொன்னாங்க. பிறகு பட்டாம்பூச்சி வந்து ஏன் அழறேன்னு கேட்டுச்சு. நான் வளர்த்த பூ வாடிருச்சுனு பையன் சொன்னான். அப்ப நான் எங்க போயி உக்காருவேன்னு பட்டாம்பூச்சி கேட்டுச்சு. உனக்கு மறுபடி பூ வளத்தித் தரேன். அதுவரை தோட்டத்துல இருக்குற பூச்செடில இருன்னு பையன் சொன்னான். சரி அங்கயே போறேன்னு பட்டாம்பூச்சி பறந்துடுச்சு. • எம். நாகஜோதி - கே. வைஷ்ணவி ஐந்தாம் வகுப்பு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கணேசபுரம், கோயம்புத்தூர்.
படம்
அரவிந்த் ஆறாம் வகுப்பு விஎஸ்எஸ்எம் உயர்நிலைப்பள்ளி சுந்தராபுரம் கோயம்புத்தூர்