இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசுமையான 5000 மலைக்காடுகள்

பூமி ஒரு நாள் விண்வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தது.  அப்போது ஒரு இடத்தில் 5000 மலைகள் கொண்ட ஒரு காடு இருந்தது.  அந்தக் காட்டில் யானை, புலி, முயல், மான், கரடி ஆகியவை மட்டுமல்லாமல் நிறைய அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் சந்தோசமாக இருந்தன.  அதனைப் பார்த்து பூமிக்கு ஒரே மகிழ்ச்சி.  என்னுடைய கிரகத்தில் விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களே என பூமி சொல்லிச் சொல்லி மகிழ்ந்தது.  அதனை மற்ற கோள்களிடமும் கூறியது.  மற்ற கோள்களும் அதனை வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தன.  உடனே ஒரு கோள் சொன்னது நாமும் ஏன் விலங்குகளாக மாறி இந்த பசுமையான அதிசய காட்டிற்குள் செல்லக்கூடாது.  ஆனால் நம்மால் எப்படி விலங்குகளாக மாற முடியும்? என்றது வேறொரு கோள்.  வாருங்கள் நாம் சூரியனிடம் கேட்போம், அவர் நம்மை விலங்குகளாக மாற்றுவார் என்றது மற்றொன்று. அனைவரும் சூரியனிடம் சென்று கேட்டனர். சூரியனே, பூமியில் பசுமையான அழகிய காடு ஒன்று இருக்கிறது. அதில் விலங்குகள் பறவைகள் அனைத்தும் சந்தோசமாக இருக்கின்றன. அதனால் நாங்களும் இன்று ஒரு நாள் மட்டும் விலங்குகளாக மாறி காட்டிற்குள் செல்லவா? எதற்காக பூ

கறுப்புப் பூனை

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு முயல் இருந்தது.  அதற்கு பக்கத்து வீட்டில் கறுப்புப் பூனை ஒன்றும் இருந்தது.  ஆனால் மானும் குதிரையும்தான் முயலுக்குப் பிடித்தமான நண்பர்கள். அதனோடுதான் எப்போதும் விளையாடி வந்தது.  ஒரு நாள் முயலை அந்தக் கறுப்புப் பூனை விளையாட அழைத்தது.  அதற்கு முயல், “உன்னுடன் விளையாடினால் உன் மீதுள்ள கறுப்பு நிறம் எனக்கும் ஒட்டிக்கொள்ளும். போ! இங்கே இருந்து” என்று சொல்லிவிட்டது.  மறுநாள் பூனை மறுபடியும் விளையாடலாமா எனக் கேட்டது. அதற்கு முயல் விளையாடலாம்! விளையாடலாம்! என்று சொன்னது. இப்பொழுது எனக்கு பச்சை இலைகளும் கேரட்டும் வேண்டுமே என முயல் கேட்டது.  கறுப்புப் பூனை உடனே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தது.  இப்பொழுது விளையாடலாமா… என்றது பூனை.  விளையாட்டா…!  “எனக்கு உணவு தேட சோம்பலா இருந்துச்சு, அதனாலதான் உன்ன வேல வாங்குனேன்” நீ கொடுத்த உணவுக்கு நன்றி என்றது முயல்.  சொல்லிவிட்டு புதருக்குள் குதித்துக்குதித்து ஓடியது. அங்கு ஒரு குழி இருந்ததை அறியாத முயல் அதற்குள் தவறி விழுந்தது. உடனே முயல் தன் நண்பர்களை அழைத்தது.  மான் நண்பன் வந்தான்.  விரைவாக என்னைக் காப்பாற்று என்று கே

மந்திர குண்டு

ஒரு நாள் நான் விளையாடிட்டு இருக்கும்போது ஒரு குண்டப் பாத்தேன்.  அப்புறம் கையில் எடுத்தேன்.  அது விசித்திரமா இருந்தது.  அத என் நண்பர்கள் எல்லாத்தையும் கூப்ட்டு காமிச்சேன்.  எல்லாரும் அத வெச்சு விளையாண்டோம். ஆனா அடுத்த நாளே அந்த குண்டு காணாமப் போயிடுச்சு.  அப்ப நான் தேடிக்கிட்டே இருந்தேன்.  அந்த நேரம் என் நண்பர்கள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தாங்க.  வந்தவங்க தேடிக்கொடுத்துட்டாங்க.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.  அடுத்த நாள் அந்தக் குண்டத் தொடும்போது விசித்திரமான ஒரு சத்தம் கேட்டது.  அப்ப அது ஒரு மந்திர குண்டுன்னு நெனச்சுக்கிட்டேன்.  அப்புறம் ரொம்ப சத்தம் கேட்டது.  அத நான் இசையின்னு நெனச்சேன். S. வசந்தி (ஐந்தாம் வகுப்பு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காமராஜ் நகர், சுந்தராபுரம், கோயம்புத்தூர்.