இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வண்ண மரம்

ஒரு ஊரில் கதிர் என்ற சிறுவன் இருந்தான். அவன் பள்ளியில் செடி ஒன்று இருந்தது.  அந்தச் செடியின் ஒரு இலை மட்டும் மிகவும் அழகாக இருக்கும்.  கதிருக்கு மிகப் பிடித்தமான இலையாக அது இருந்தது.  தினமும் அந்த இலையைப் பார்த்துக்கொண்டே இருப்பது அவனுக்கு விருப்பமானது.  ஒருநாள் அவன் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது ஆசிரியர் அவனிடம், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். உடனே கதிர் ஆசிரியரிடம் “இங்கே பாருங்கள், இந்த இலை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றான். ஆசிரியர் கதிரிடம், “அந்த இலையை நீயே எடுத்துக்கொள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அவனுக்குப் பிரியமான அந்த இலையோடு அன்று வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது பள்ளி விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள். அவனுக்கு விருப்பமான அந்த இலையை அன்றைய நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது அந்த இலை திடீரென்று நிறைய வண்ணங்களால் நிறைந்தது.  அதனைப் பார்த்து வியந்துபோனவன் அந்த இலையை எடுத்துக்கொண்டுபோய் காட்டிற்குள் வீசினான்.  இலை விழுந்த காட்டிற்குள் அன்றைய நாள் பெரிதாக மழை பெய்தது.  வண்ண இலை மண்ணுக்குள்

பேசும் புத்தகம்

ஒரு நாள் காலை சூர்யா என்ற சிறுவனுக்கு அவன் அப்பா ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுத்தார். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு சூர்யா தன் அறைக்குச் சென்றான். அப்பொழுது அப்பா வாங்கித் தந்த கதைப்புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தோன்றியது.  அதை எடுத்துப்பார்த்தால் அதில் ஒன்றுமே எழுதியிருப்பது போன்று தெரியவில்லை.  ஆனால் அதில் வாய் போன்ற உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது.  சூர்யா அதை மெதுவாகத் தொட்டுப்பார்த்தான்.  தீண்டியவுடன் அது திடீரென கதை சொல்லத் தொடங்கியது.  அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தாலும், அதன் குரலும் கதையும் மிகவும் பிடித்திருந்தது.  தினமும் சூர்யா அதில் மூன்று கதைகள் கேட்பான்.  ஒரு நாள் இரவு உணவை முடித்துவிட்டு அந்த புத்தகத்திடம் கதை கேட்கச் சென்றான். அங்கே புத்தகம் காணவில்லை.  வீடு முழுவதும் சூர்யா புத்தகத்தை தேடினான்.  எங்கே தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. சோகத்துடன் சென்று தன் அறையில் படுத்துக்கொண்டான்.  அன்று தூக்கத்தில் அவனுக்கொரு கனவு வந்தது.  கனவில் ஒரு புத்தகம் இருந்தது.  கனவில் வந்த புத்தகம் அவனுடன் பேசியது.  “நான் உன் நண்பனிடம் இருக்கிறேன். நேற்று உன் நண்பனை பார்க

பிரியாத நண்பர்கள்

ஒரு ஊரில் ஒரு அழகான தோட்டம் இருந்தது.  அந்த தோட்டத்தில் அழகான பூ ஒன்று இருந்தது. ஒரு நாள் ஒரு ஆட்டுக்குட்டி உணவு தேடி அந்தப் பூந்தோட்டப் பாதையில் சென்றது. அப்பொழுது அந்தத் தோட்டத்தில் இருந்த பூவை ஆடு பார்த்தது. அந்த ஆடு செடியை சாப்பிடச் சென்ற பொழுது அந்தப் பூ மிகவும் வருந்தியது. அதனைப் பார்த்த ஆடு பரிதாபப்பட்டு நான் உன்னை சாப்பிடமாட்டேன் என்று கூறியது.  ஆடும் பூவும் நண்பர்கள் ஆகினர். அப்பொழுது தேனி ஒன்று அந்தப் பூவில் தேனெடுக்க வந்தது.  அந்தத் தேனிக்கோ நண்பர்களே இல்லை. பூவையும் ஆட்டுக்குட்டியையும் பார்த்த தேனி என்னையும் உங்கள் நண்பனாக்கிக்கொள்வீர்களா? என ஆசையாகக் கேட்டது.  பூவும் ஆட்டுக்குட்டியும் உடனே சரி என்றன.  ஒருநாள் மூன்று பேரும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது தேனீ, நாம் அனைவரும் ஊரைச்சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டது.  அப்பொழுது ஆட்டுக்குட்டி சரி என்று உடனே தலையாட்ட, பூவுக்கோ வருத்தமாகிவிட்டது. உடனே ஆட்டுக்குட்டி பூவைப்பார்த்து ஏன் கவலைப்படுகிறாய் என்று கேட்டது. அதற்கு பூ, நீங்கள் இரண்டு பேரும் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள் என்று பதில் சொன்னது.  நீ