ஒரு ஊருல ஒரு அழகான வயல் இருந்துச்சா
அங்க ஒரு சோளக்காட்டு பொம்மை இருந்துச்சாம்
ஒரு நாளு திடீர்னு ஒரு சந்தோசமான சத்தம் வந்துச்சா
எங்க இருந்து சத்தம் வருதுன்னு பொம்மை தேடிக்கிட்டே போச்சு
அப்ப ஒரு குகைக்குள்ள இருந்து சத்த வற்றத தெரிஞ்சுக்கிட்ட
அந்த பொம்மை அதுக்குள்ள போச்சா
அங்க வரிக்குதிர நிறத்துல ஒரு பெட்டி இருந்துச்சா
அது மேல எல்லா பறவையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்துச்சா
அத பாத்துட்டு அந்த பொம்மையும் தொட்டுப்பாத்துச்சு
அப்பவும் அந்த சந்தோசமான சத்தம் கேட்டுச்சு
அந்த சத்தத்தக் கேட்டு எல்லா பறவையும் விலங்கும்
மகிழ்ச்சியா ஆட்டம் போட்டாங்களாம்.
கதை -
வி. அறிவரசு (இரண்டாம் வகுப்பு)
காரைக்குடி

ஓவியம் –
தமிழ்நாடு அறிவியல் மன்றக் குழந்தைகள்
திண்டுக்கல்



குட்டி ஆகாயம் இதழ் இரண்டில் (செப்டம்பர் 2016) வெளியான கதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

பூத்தொட்டி